கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலிருந்து இருந்து தினமும் 100 கிலோ மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்படுகிறது - மாநகராட்சி அதிகாரி தகவல்!

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களிடம் இருந்து மருத்துவ கழிவுகள் தனி வாகனங்கள் மூலமாக சேகரிக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்..


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களிடம் இருந்து மருத்துவ கழிவுகள் தனி வாகனங்கள் மூலமாக சேகரிக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3000 மேல் பதிவாகி வருகிறது. இதில் லேசான தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வருவோர், மருத்துவமனைகளில் அவசியம் தங்கி சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், வீடுகளில் இருந்தே உரிய மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி சார்பில் அனுமதி அளிக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி மட்டும் 11,000 பேர் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாநகராட்சி பகுதிகளில் இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களிடம் பயன்படுத்திய முகக்கவசம், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை தனி வாகனங்கள் மூலமாக சேகரிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநகராட்சி சார்பில் மண்டலம் ஒன்றுக்கு ஒரு வாகனம் வீதம் 5 மண்டலங்களுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களிடம் இருந்து மருத்துவ கழிவுகள் சேகரிக்க தனியாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு மண்டலத்திலும் 15 முதல் 20 கிலோ வரை மருத்துவ கழிவுகள் தினமும் சேகரமாகின்றன. தனி வாகனங்களில் சேகரிக்கப்படும் இக்கழிவுகள், குப்பையை கையாளும் கழிவு மேலாண்மை பிரிவு வசம் சேர்க்கப்படுகிறது.

அதேபோல், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் வீடுகளில் சேகரமாகும் குப்பையும் தனியாக சேகரிக்கப்படுகின்றன. இக்குப்பை வெள்ளலூரர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகின்றன," என்றார்.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....