கோவை: வால்பாறை நகரைச் சுற்றி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடியது.
கோவை: வால்பாறை நகரைச் சுற்றி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடியது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று இரண்டாம் அலையின் காரணமாக இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 10 பேர் பலியாகியுள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் வருவாய் துறையினர் நகராட்சி மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மளிகை காய்கறி இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமான தொழிலாளர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வால்பாறை நகரில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், வால்பாறை வட்டாட்சியர் ராஜா உத்தரவின் பேரில் வால்பாறை நகரைச் சுற்றியுள்ள சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தேவையின்றி சுற்றுபவர்கள் எச்சரித்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதன் காரணமாக வால்பாறை நகரில் கூட்டம் சேர்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று இரண்டாம் அலையின் காரணமாக இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 10 பேர் பலியாகியுள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் வருவாய் துறையினர் நகராட்சி மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மளிகை காய்கறி இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமான தொழிலாளர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வால்பாறை நகரில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், வால்பாறை வட்டாட்சியர் ராஜா உத்தரவின் பேரில் வால்பாறை நகரைச் சுற்றியுள்ள சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தேவையின்றி சுற்றுபவர்கள் எச்சரித்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதன் காரணமாக வால்பாறை நகரில் கூட்டம் சேர்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.