கோவை: கோவை மாவட்டத்தில் தினமும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உயர் அதிகாரிகள் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என, தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட தொழில் வணிக அமைப்புகளின் கூட்டு குழு கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் தினமும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உயர் அதிகாரிகள் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என, தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட தொழில் வணிக அமைப்புகளின் கூட்டு குழு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவ்வமைப்பு சார்பில் அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 3,000க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் பலம் பெற்று சிறப்பாக செயல்படும் வகையில் உயர் அதிகாரிகள் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இது எங்கள் தாழ்மையான கருத்து.
இதுதொடர்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கோவை மாவட்ட வணிக அமைப்புகளின் கூட்டுக்குழு தனது முழு ஒத்துழைப்பையும் தர தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவ்வமைப்பு சார்பில் அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 3,000க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் பலம் பெற்று சிறப்பாக செயல்படும் வகையில் உயர் அதிகாரிகள் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இது எங்கள் தாழ்மையான கருத்து.
இதுதொடர்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கோவை மாவட்ட வணிக அமைப்புகளின் கூட்டுக்குழு தனது முழு ஒத்துழைப்பையும் தர தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.