கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் அனைத்து பணிகளையும் நேரில் ஆய்வு செய்து பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார். பணிகள் தரமாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் பல்வேறு தூய்மைப் பணிகள் இன்று தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் கண்காணித்து ஆய்வு செய்தார்.






பீளமேடு கோபால் நகர் ராஜகோபால் லேஅவுட் பகுதியில் இன்று நடைபெற்ற டெங்கு கொசு ஒழிப்பு பணியின்போது, கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. மேலும் bleaching பவுடர் தூவப்பட்டு, தண்ணீர் தொட்டிகளில் Abate மருந்து ஊற்றப்பட்டது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் பார்வையிட்டு பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என ஆய்வு செய்தார்.






இதேபோல், பீளமேடு சாந்திநகர் பகுதியில் உள்ள பூங்காவில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளையும் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் பார்வையிட்டார். பூங்காவில் மேற்கொள்ளப்படும் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்பாக தூய்மைப் பணியாளர்களுடன் விவாதித்து, பணிகளை தரமாகவும் விரைவாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.




மேலும், பீளமேடு பாரதி காலனி பகுதியில் உள்ள வார்டு AE அலுவலகத்தில் குவிந்திருந்த மர குப்பைகளை சுத்தம் செய்யும் பணியும் இன்று நடைபெற்றது. இந்த பணியையும் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து மர குப்பைகளும் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று தூய்மை பணியாளர்களிடம் வலியுறுத்தினார்.






பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தூய்மை குறித்து வார்டு கவுன்சிலர் தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...