வால்பாறை: கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அரசு உத்தரவின்படி, வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வால்பாறை: கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அரசு உத்தரவின்படி, வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தாலுக்கா அளவில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வால்பாறை நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள் கல்லூரி வளாகத்தைப் பார்வையிட்டு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பணியைத் தொடங்கி உள்ளனர். வால்பாறை வட்டாட்சியர் ராஜா, வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன், கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பார்வையிட்டு பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தாலுக்கா அளவில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வால்பாறை நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள் கல்லூரி வளாகத்தைப் பார்வையிட்டு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பணியைத் தொடங்கி உள்ளனர். வால்பாறை வட்டாட்சியர் ராஜா, வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன், கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பார்வையிட்டு பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.