கோவை: பொள்ளாச்சியில் இன்று 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சியில் இன்று 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியைப் பொறுத்தவரை இன்று நகரப்பகுதியில் 47 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 38 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 35 பேருக்கும் என மொத்தம் இன்று ஒரே நாளில் 120 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியைப் பொறுத்தவரை இன்று நகரப்பகுதியில் 47 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 38 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 35 பேருக்கும் என மொத்தம் இன்று ஒரே நாளில் 120 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.