பொள்ளாச்சி: ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்படுகிறது.
பொள்ளாச்சி: ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்படுகிறது.
ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றாக இருப்பது ஆழியாறு அணை. இந்த அணையிலிருந்து பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது. அதன்படி நேற்று ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 16/05/2021 முதல் 15/10/2021 வரை 153 நாட்களுக்கு ஆயிரத்து 1205 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. தண்ணீர் திறப்பின் போது செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா, ஆழியாறு அணை உதவி பொறியாளர் மாணிக்கவேல் ஆகியோர் இருந்தனர்.
ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றாக இருப்பது ஆழியாறு அணை. இந்த அணையிலிருந்து பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது. அதன்படி நேற்று ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 16/05/2021 முதல் 15/10/2021 வரை 153 நாட்களுக்கு ஆயிரத்து 1205 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. தண்ணீர் திறப்பின் போது செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா, ஆழியாறு அணை உதவி பொறியாளர் மாணிக்கவேல் ஆகியோர் இருந்தனர்.