ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு..!

பொள்ளாச்சி: ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்படுகிறது.


பொள்ளாச்சி: ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்படுகிறது.

ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றாக இருப்பது ஆழியாறு அணை. இந்த அணையிலிருந்து பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது. அதன்படி நேற்று ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 16/05/2021 முதல் 15/10/2021 வரை 153 நாட்களுக்கு ஆயிரத்து 1205 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. தண்ணீர் திறப்பின் போது செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா, ஆழியாறு அணை உதவி பொறியாளர் மாணிக்கவேல் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...