கோவை பீளமேடு அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து கேட்டு சாலை மறியல்..!

கோவை: கோவை பீளமேடு அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டதால், மருந்து வாங்க வந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை பீளமேடு அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டதால், மருந்து வாங்க வந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து கடந்த எட்டாம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ரெம்டெசிவிர் வாங்க வருபவர்களின் கூட்டம் மாநிலம் முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து மருந்து தேவைப்படும் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்தது. அதற்கான உடனடி நடவடிக்கைகளையும் எடுத்த தமிழக அரசு, நாளை முதல் மருந்து விநியோகத்தை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.



தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் இன்று மருந்து வாங்க வந்த நோயாளிகளின் உறவினர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தங்களுக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி முன்பாக அவினாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை முதல் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்கு மருந்து விநியோகம் செய்யப்படும் என கூறிய காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...