கோவை பீளமேடு அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து கேட்டு சாலை மறியல்..!

கோவை: கோவை பீளமேடு அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டதால், மருந்து வாங்க வந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை பீளமேடு அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டதால், மருந்து வாங்க வந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து கடந்த எட்டாம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ரெம்டெசிவிர் வாங்க வருபவர்களின் கூட்டம் மாநிலம் முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து மருந்து தேவைப்படும் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்தது. அதற்கான உடனடி நடவடிக்கைகளையும் எடுத்த தமிழக அரசு, நாளை முதல் மருந்து விநியோகத்தை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.



தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் இன்று மருந்து வாங்க வந்த நோயாளிகளின் உறவினர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தங்களுக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி முன்பாக அவினாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை முதல் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்கு மருந்து விநியோகம் செய்யப்படும் என கூறிய காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...