வால்பாறை: கோவை வால்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வால்பாறை: கோவை வால்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த நான்கு நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து, மின்சாரம், தொலைத்தொடர்பு சேவை பாதிப்படைந்து சீராகி வருகிறது. இந்தநிலையில் வால்பாறை நகரை ஒட்டியுள்ள சவராங்காடு தேயிலைத் தோட்டத்தின் பிரதான சாலையில் குறுக்கே ராட்சத மரம் விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. சாலையின் குறுக்கே மரம் அடைத்துள்ளதால் கேட் வழியாக மக்கள் செல்ல முடியாமல் சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றி வால்பாறை நகருக்குச் சென்று வருகின்றனர்.
இதுபோல் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மேலும், வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது. இவற்றை நெடுஞ்சாலைத் துறையினர் அவ்வப்போது அகற்றி வருகின்றனர். வால்பாறையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த நான்கு நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து, மின்சாரம், தொலைத்தொடர்பு சேவை பாதிப்படைந்து சீராகி வருகிறது. இந்தநிலையில் வால்பாறை நகரை ஒட்டியுள்ள சவராங்காடு தேயிலைத் தோட்டத்தின் பிரதான சாலையில் குறுக்கே ராட்சத மரம் விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. சாலையின் குறுக்கே மரம் அடைத்துள்ளதால் கேட் வழியாக மக்கள் செல்ல முடியாமல் சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றி வால்பாறை நகருக்குச் சென்று வருகின்றனர்.
இதுபோல் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மேலும், வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது. இவற்றை நெடுஞ்சாலைத் துறையினர் அவ்வப்போது அகற்றி வருகின்றனர். வால்பாறையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.