கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்த மழையால், அங்குள்ள பழங்குடி மக்களின் வீடுகள் சேதம் அடைந்தன. நிரந்தர வீடுகளை கட்டித் தர சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்த மழையால், அங்குள்ள பழங்குடி மக்களின் வீடுகள் சேதம் அடைந்தன. நிரந்தர வீடுகளை கட்டித் தர சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வீட்டின் குடிசைகள் காற்றில் பறந்தன. புயல் மற்றும் கடும் மழையினால் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள பழங்குடியினர் கிராம குடியிருப்புகளும் கடும் சேதம் அடைந்து உள்ளன. கோவை ஆனைமலை வன எல்லைக்கு உட்பட்ட 14 கிராமங்களில் நமக்கு தகவல் தெரிந்த வகையில் சின்னார்பதியில் 7 வீடுகளும், காட்டுபட்டியில் 7 வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. மற்ற கிராமங்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து மழையும் காற்றும் பயங்கரமாக இருப்பதால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு இனிமேலும் காலம் தாமதிக்காமல் உடனடியாக புலிகள் காப்பக பகுதியில் வசிக்கும் பழங்குடிகளுக்கு தரமான வீடுகளை அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு இந்தப் பழங்குடி மக்களுக்கு உடனடியாக நிரந்தர வீடுகள் கட்டித் தரும் என்கிற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வீட்டின் குடிசைகள் காற்றில் பறந்தன. புயல் மற்றும் கடும் மழையினால் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள பழங்குடியினர் கிராம குடியிருப்புகளும் கடும் சேதம் அடைந்து உள்ளன. கோவை ஆனைமலை வன எல்லைக்கு உட்பட்ட 14 கிராமங்களில் நமக்கு தகவல் தெரிந்த வகையில் சின்னார்பதியில் 7 வீடுகளும், காட்டுபட்டியில் 7 வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. மற்ற கிராமங்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து மழையும் காற்றும் பயங்கரமாக இருப்பதால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு இனிமேலும் காலம் தாமதிக்காமல் உடனடியாக புலிகள் காப்பக பகுதியில் வசிக்கும் பழங்குடிகளுக்கு தரமான வீடுகளை அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு இந்தப் பழங்குடி மக்களுக்கு உடனடியாக நிரந்தர வீடுகள் கட்டித் தரும் என்கிற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.