கோவையில் பழங்குடி மக்களின் வீடுகள் மழையால் சேதம்... நிரந்தர வீடுகளைக் கட்டித் தர கோரிக்கை..!

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்த மழையால், அங்குள்ள பழங்குடி மக்களின் வீடுகள் சேதம் அடைந்தன. நிரந்தர வீடுகளை கட்டித் தர சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்த மழையால், அங்குள்ள பழங்குடி மக்களின் வீடுகள் சேதம் அடைந்தன. நிரந்தர வீடுகளை கட்டித் தர சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வீட்டின் குடிசைகள் காற்றில் பறந்தன. புயல் மற்றும் கடும் மழையினால் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள பழங்குடியினர் கிராம குடியிருப்புகளும் கடும் சேதம் அடைந்து உள்ளன. கோவை ஆனைமலை வன எல்லைக்கு உட்பட்ட 14 கிராமங்களில் நமக்கு தகவல் தெரிந்த வகையில் சின்னார்பதியில் 7 வீடுகளும், காட்டுபட்டியில் 7 வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. மற்ற கிராமங்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து மழையும் காற்றும் பயங்கரமாக இருப்பதால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.



தமிழக அரசு இனிமேலும் காலம் தாமதிக்காமல் உடனடியாக புலிகள் காப்பக பகுதியில் வசிக்கும் பழங்குடிகளுக்கு தரமான வீடுகளை அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு இந்தப் பழங்குடி மக்களுக்கு உடனடியாக நிரந்தர வீடுகள் கட்டித் தரும் என்கிற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...