கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 5 வயது சிறுமி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, தான் உண்டியலில் சேர்த்து வைத்த 2,300 ரூபாயை வால்பாறை வட்டாட்சியாளரிடம் வழங்கினார்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 5 வயது சிறுமி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, தான் உண்டியலில் சேர்த்து வைத்த 2,300 ரூபாயை வால்பாறை வட்டாட்சியாளரிடம் வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா பரவுதல் மிகத்தீவிரமாக அடைந்த நிலையில், தமிழக அரசுக்கு பல்வேறு நிறுவனங்கள், அமைப்பினர், தனிநபர் போன்றவர்கள் கொரோனா நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில், வால்பாறை கக்கன் காலனி பகுதியில் குடியிருக்கும் வழக்கறிஞரான அன்பு நாகராஜின் மகள் இசை யாழினி(வயது 5) தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயில்கிறார். இச்சிறுமி, தனது பிறந்தநாள் விழாவிற்கு கேக் மற்றும் புத்தாடைகள் வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த 2334 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

வால்பாறை பகுதியில் வட்டாட்சியர் ராஜனிடம் சிறுமி மற்றும் அவரது தாயார் நாகரத்தினம் இணைந்து திமுக நகர பொறுப்பாளர் பால்பாண்டி மற்றும் வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாஸ்கர் முன்னிலையில் இந்த உண்டியலை ஒப்படைத்தனர். உண்டியல் பணத்தை எண்ணிப்பார்த்தில் 2334 ரூபாய் இருந்தது. சிறுவயதிலே உதவி செய்ய வேண்டுமென்ற மனப்பக்குவம் உள்ள சிறுமியை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் வாழ்த்தி பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவுதல் மிகத்தீவிரமாக அடைந்த நிலையில், தமிழக அரசுக்கு பல்வேறு நிறுவனங்கள், அமைப்பினர், தனிநபர் போன்றவர்கள் கொரோனா நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில், வால்பாறை கக்கன் காலனி பகுதியில் குடியிருக்கும் வழக்கறிஞரான அன்பு நாகராஜின் மகள் இசை யாழினி(வயது 5) தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயில்கிறார். இச்சிறுமி, தனது பிறந்தநாள் விழாவிற்கு கேக் மற்றும் புத்தாடைகள் வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த 2334 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
வால்பாறை பகுதியில் வட்டாட்சியர் ராஜனிடம் சிறுமி மற்றும் அவரது தாயார் நாகரத்தினம் இணைந்து திமுக நகர பொறுப்பாளர் பால்பாண்டி மற்றும் வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாஸ்கர் முன்னிலையில் இந்த உண்டியலை ஒப்படைத்தனர். உண்டியல் பணத்தை எண்ணிப்பார்த்தில் 2334 ரூபாய் இருந்தது. சிறுவயதிலே உதவி செய்ய வேண்டுமென்ற மனப்பக்குவம் உள்ள சிறுமியை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் வாழ்த்தி பாராட்டி வருகின்றனர்.