கோவை: முன்களப் பணியாளர்களான துாய்மை பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என, தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை: முன்களப் பணியாளர்களான துாய்மை பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என, தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கையில், ‘‘கொரோனா பெருந்தொற்று காலத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு, அவர்களின் பொறுப்புக்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்து உள்ளார். மருத்துவப் பணியாளர்களோடு இணைந்து, முன்களப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களையும், தமிழக அரசு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும் ஓராண்டுக்கும் மேலாக, கொரோனா தொற்று எதிர்ப்புப் போராட்டத்தில், தூய்மைப் பணியாளர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலர் இறந்துள்ளனர்; பலர் நோய்வாய்ப்பட்டு உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் கூட, மாத ஊதியம் கொடுக்கப்படாமல், பல மாவட்டங்களில் நிலுவை இருந்து வருகிறது. இதையெல்லாம் கவனத்தில் வைத்து, முன்களப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகையும், கொரோனா எதிர்ப்புப் போராட்டத்தில் இறந்தால், நஷ்ட ஈடாக 25 லட்சம் ரூபாயும் தர, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கையில், ‘‘கொரோனா பெருந்தொற்று காலத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு, அவர்களின் பொறுப்புக்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்து உள்ளார். மருத்துவப் பணியாளர்களோடு இணைந்து, முன்களப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களையும், தமிழக அரசு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும் ஓராண்டுக்கும் மேலாக, கொரோனா தொற்று எதிர்ப்புப் போராட்டத்தில், தூய்மைப் பணியாளர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலர் இறந்துள்ளனர்; பலர் நோய்வாய்ப்பட்டு உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் கூட, மாத ஊதியம் கொடுக்கப்படாமல், பல மாவட்டங்களில் நிலுவை இருந்து வருகிறது. இதையெல்லாம் கவனத்தில் வைத்து, முன்களப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகையும், கொரோனா எதிர்ப்புப் போராட்டத்தில் இறந்தால், நஷ்ட ஈடாக 25 லட்சம் ரூபாயும் தர, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.