நெருக்கடியில் தவிக்கும் எம்.எஸ்.எம்.இ.,களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு 'கொடிசியா' வேண்டுகோள்!

கோவை: நெருக்கடியில் தவிக்கும் எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஊரடங்கு காலத்தில், நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு 'கொடிசியா' வேண்டுகோள் விடுத்துள்ளது.


கோவை: நெருக்கடியில் தவிக்கும் எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஊரடங்கு காலத்தில், நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு 'கொடிசியா' வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்(கொடிசியா) தலைவர் ரமேஷ்பாபு கூறியுள்ளதாவது:

கொரோனா இரண்டாவது அலையால், தொழில் நிறுவனங்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. வருமானம் இழப்பால் வங்கிக்கடன், வரி, மின் கட்டணம் செலுத்த முடியாமல் குறு, சிறு நிறுவனங்கள் திணறி வருகின்றன.

இச்சூழலில், எம்.எஸ்.எம்.இ.,கள் மீள தேவைப்படும், கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம், 'கோவிட் 19' தடுப்பூசி போடுவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை இழந்து நெருக்கடியில் தவிக்கும், எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஊரடங்கு சமயத்தில் நிவாரண நிதி வழங்க வேண்டும். அவசரகால கடன் உதவி திட்டத்தின் கீழ், தொழிற்சாலைகளுக்கு அவற்றின் நடப்பு மூலதன கடன் அல்லது ரொக்கக் கடன் வசதி ஆகியவற்றில் கூடுதலாக, 20 சதவீதம் கடன் உதவியை எந்த நிபந்தனையும் இல்லாமல் வங்கிகளும், வங்கிசாரா நிதி நிறுவனங்களும் வழங்க வேண்டும்.

அதேபோல, தற்போது ஏற்பட்டுள்ள, பொருளாதார நெருக்கடியில் இருந்து, விடுபடும் விதமாக, இரண்டு வருட கால கடன் விடுப்பு காலத்திற்கு பிறகு, இந்த கூடுதல் கடன் தொகையை திருப்பி செலுத்தும் காலத்தை, ஆறு ஆண்டுகளாக நிர்ணயிக்க வேண்டும்.அனைத்து கடன்களுக்கும், அடுத்த ஓராண்டுக்கு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும். மின் கட்டணம், வருமான வரி, ஜி.எஸ்.டி., உள்ளிட்டவற்றில் இருந்து விலக்கு அளித்தால் உதவியாக இருக்கும். எரிபொருள் மற்றும் பெட்ரோலிய பொருட்களை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...