கோவை: நெருக்கடியில் தவிக்கும் எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஊரடங்கு காலத்தில், நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு 'கொடிசியா' வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை: நெருக்கடியில் தவிக்கும் எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஊரடங்கு காலத்தில், நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு 'கொடிசியா' வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்(கொடிசியா) தலைவர் ரமேஷ்பாபு கூறியுள்ளதாவது:
கொரோனா இரண்டாவது அலையால், தொழில் நிறுவனங்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. வருமானம் இழப்பால் வங்கிக்கடன், வரி, மின் கட்டணம் செலுத்த முடியாமல் குறு, சிறு நிறுவனங்கள் திணறி வருகின்றன.
இச்சூழலில், எம்.எஸ்.எம்.இ.,கள் மீள தேவைப்படும், கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம், 'கோவிட் 19' தடுப்பூசி போடுவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை இழந்து நெருக்கடியில் தவிக்கும், எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஊரடங்கு சமயத்தில் நிவாரண நிதி வழங்க வேண்டும். அவசரகால கடன் உதவி திட்டத்தின் கீழ், தொழிற்சாலைகளுக்கு அவற்றின் நடப்பு மூலதன கடன் அல்லது ரொக்கக் கடன் வசதி ஆகியவற்றில் கூடுதலாக, 20 சதவீதம் கடன் உதவியை எந்த நிபந்தனையும் இல்லாமல் வங்கிகளும், வங்கிசாரா நிதி நிறுவனங்களும் வழங்க வேண்டும்.
அதேபோல, தற்போது ஏற்பட்டுள்ள, பொருளாதார நெருக்கடியில் இருந்து, விடுபடும் விதமாக, இரண்டு வருட கால கடன் விடுப்பு காலத்திற்கு பிறகு, இந்த கூடுதல் கடன் தொகையை திருப்பி செலுத்தும் காலத்தை, ஆறு ஆண்டுகளாக நிர்ணயிக்க வேண்டும்.அனைத்து கடன்களுக்கும், அடுத்த ஓராண்டுக்கு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும். மின் கட்டணம், வருமான வரி, ஜி.எஸ்.டி., உள்ளிட்டவற்றில் இருந்து விலக்கு அளித்தால் உதவியாக இருக்கும். எரிபொருள் மற்றும் பெட்ரோலிய பொருட்களை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்(கொடிசியா) தலைவர் ரமேஷ்பாபு கூறியுள்ளதாவது:
கொரோனா இரண்டாவது அலையால், தொழில் நிறுவனங்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. வருமானம் இழப்பால் வங்கிக்கடன், வரி, மின் கட்டணம் செலுத்த முடியாமல் குறு, சிறு நிறுவனங்கள் திணறி வருகின்றன.
இச்சூழலில், எம்.எஸ்.எம்.இ.,கள் மீள தேவைப்படும், கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம், 'கோவிட் 19' தடுப்பூசி போடுவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை இழந்து நெருக்கடியில் தவிக்கும், எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஊரடங்கு சமயத்தில் நிவாரண நிதி வழங்க வேண்டும். அவசரகால கடன் உதவி திட்டத்தின் கீழ், தொழிற்சாலைகளுக்கு அவற்றின் நடப்பு மூலதன கடன் அல்லது ரொக்கக் கடன் வசதி ஆகியவற்றில் கூடுதலாக, 20 சதவீதம் கடன் உதவியை எந்த நிபந்தனையும் இல்லாமல் வங்கிகளும், வங்கிசாரா நிதி நிறுவனங்களும் வழங்க வேண்டும்.
அதேபோல, தற்போது ஏற்பட்டுள்ள, பொருளாதார நெருக்கடியில் இருந்து, விடுபடும் விதமாக, இரண்டு வருட கால கடன் விடுப்பு காலத்திற்கு பிறகு, இந்த கூடுதல் கடன் தொகையை திருப்பி செலுத்தும் காலத்தை, ஆறு ஆண்டுகளாக நிர்ணயிக்க வேண்டும்.அனைத்து கடன்களுக்கும், அடுத்த ஓராண்டுக்கு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும். மின் கட்டணம், வருமான வரி, ஜி.எஸ்.டி., உள்ளிட்டவற்றில் இருந்து விலக்கு அளித்தால் உதவியாக இருக்கும். எரிபொருள் மற்றும் பெட்ரோலிய பொருட்களை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.