கோவை: தமிழக உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக இருந்த பார்த்திபன் என்பவரின், விருப்ப ஓய்வு மனுவை, கோவை மாநகராட்சி நிராகரித்தது.
கோவை: தமிழக உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக இருந்த பார்த்திபன் என்பவரின், விருப்ப ஓய்வு மனுவை, கோவை மாநகராட்சி நிராகரித்தது.
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு உதவியாளராக, கோவை மாநகராட்சியின் சார்பில், உதவி பொறியாளர் பார்த்திபன் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், இருதய பாதிப்பு ஏற்பட்டதால், உதவியாளர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட பார்த்திபன், மருத்துவ விடுப்பில், சொந்த ஊருக்குச் சென்றார். மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார். தன்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாது என நினைத்த அவர், விருப்ப ஓய்வு கேட்டு, மாநகராட்சிக்கு விண்ணப்பித்தார். விடுப்பு முடிந்து, பணியில் மீண்டும் இணைந்த பிறகே, விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என கூறி, அவ்விண்ணப்பத்தை, மாநகராட்சி நிர்வாகம் நிராகரித்தது.
இதன் காரணமாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், அவர் முறையிட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக, உதவியாளராக நியமிக்கப்பட்ட இளம் பொறியாளர் சரவணன், தேர்தல் சமயத்தில், லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்த குற்றத்துக்காக, சமீபத்தில், ‘சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு உதவியாளராக, கோவை மாநகராட்சியின் சார்பில், உதவி பொறியாளர் பார்த்திபன் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், இருதய பாதிப்பு ஏற்பட்டதால், உதவியாளர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட பார்த்திபன், மருத்துவ விடுப்பில், சொந்த ஊருக்குச் சென்றார். மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார். தன்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாது என நினைத்த அவர், விருப்ப ஓய்வு கேட்டு, மாநகராட்சிக்கு விண்ணப்பித்தார். விடுப்பு முடிந்து, பணியில் மீண்டும் இணைந்த பிறகே, விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என கூறி, அவ்விண்ணப்பத்தை, மாநகராட்சி நிர்வாகம் நிராகரித்தது.
இதன் காரணமாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், அவர் முறையிட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக, உதவியாளராக நியமிக்கப்பட்ட இளம் பொறியாளர் சரவணன், தேர்தல் சமயத்தில், லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்த குற்றத்துக்காக, சமீபத்தில், ‘சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.