முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக இருந்த பார்த்திபனின் விருப்ப ஓய்வு மனு நிராகரிப்பு..!

கோவை: தமிழக உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக இருந்த பார்த்திபன் என்பவரின், விருப்ப ஓய்வு மனுவை, கோவை மாநகராட்சி நிராகரித்தது.


கோவை: தமிழக உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக இருந்த பார்த்திபன் என்பவரின், விருப்ப ஓய்வு மனுவை, கோவை மாநகராட்சி நிராகரித்தது.

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு உதவியாளராக, கோவை மாநகராட்சியின் சார்பில், உதவி பொறியாளர் பார்த்திபன் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், இருதய பாதிப்பு ஏற்பட்டதால், உதவியாளர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட பார்த்திபன், மருத்துவ விடுப்பில், சொந்த ஊருக்குச் சென்றார். மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார். தன்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாது என நினைத்த அவர், விருப்ப ஓய்வு கேட்டு, மாநகராட்சிக்கு விண்ணப்பித்தார். விடுப்பு முடிந்து, பணியில் மீண்டும் இணைந்த பிறகே, விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என கூறி, அவ்விண்ணப்பத்தை, மாநகராட்சி நிர்வாகம் நிராகரித்தது.

இதன் காரணமாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், அவர் முறையிட்டுள்ளார்.

இவருக்கு பதிலாக, உதவியாளராக நியமிக்கப்பட்ட இளம் பொறியாளர் சரவணன், தேர்தல் சமயத்தில், லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்த குற்றத்துக்காக, சமீபத்தில், ‘சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...