உயிரைக் காக்க போராடும் மருத்துவர்கள் மீது மனிதாபிமானம் காட்டுங்கள் என டீன் நிர்மலா உருக்கம்!

கோவை: மக்கள் உயிரைக் காக்க போராடும் மருத்துவர்கள் மீது மனிதாபிமானம் காட்டுங்கள் என கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: மக்கள் உயிரைக் காக்க போராடும் மருத்துவர்கள் மீது மனிதாபிமானம் காட்டுங்கள் என கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காக வரும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் படுக்கைகள், சாதாரண படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை நிரம்பி வழிகின்றன.

மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதி பெற பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது, நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கூட யாரும் இல்லை என கூறுகின்றனர். இதனால் மருத்துவர்கள், ஊழியர்களிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். சிலர் மருத்துவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற பேரிடர் சமயத்தில், டாக்டர்கள் மனநிலையை புரிந்து கொண்டு, மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே மன அழுத்தம் இல்லாமல் பணியாற்ற முடியும், என டாக்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், “அனைவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தொடர்ந்து மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர். நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்ப சிகிச்சை அளித்து வருகிறோம். எங்களிடம் உள்ள ஊழியர்கள் வைத்து சிறப்பாக பணியாற்றி வருகிறோம். ஆனால், நோயாளிகளின் உறவினர்கள் சிலர் டாக்டர்களின் பணிக்கு இடையூறு செய்கின்றனர். இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. மக்களுக்காக போராடும் மருத்துவர்கள் மீதும், கொஞ்சம் மனிதாபிமானம் காட்டுங்கள். நாங்களும் மனிதர்கள் தான்" என்றார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...