நீலகிரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தகவல்!

நீலகிரி: ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நீலகிரி, பெரம்பலூர், விருதுநகர் மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.


நீலகிரி: ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நீலகிரி, பெரம்பலூர், விருதுநகர் மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.



நீலகிரி மாவட்டம் உதகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வனத்துறை அமைச்சருமான கா.ராமசந்திரன் கலந்து கொண்டு நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



அப்போது டிவிஎஸ் அறக்கட்டளை சார்பாக நீலகிரி மாவட்ட சுகாதார துறைக்கு 25 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செரிவூட்டிகள் அமைச்சரிடம் ஒப்படைக்கபட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் கூறியதாவது;

“நீலகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் இருப்பு அதிகமாக உள்ளது. சிகிச்சை மையங்களில் கூடுதல் படுக்கைகள் இருக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட பட்டுள்ளது. இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் யானைகள் தாக்கி மனிதர்கள் இறப்பதை தடுக்கவும், குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டு யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையில் புதிதாக தனி பிரிவு உருவாக்கப்பட உள்ளது. அந்த குழுவினர் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் வருவதை தடுத்து வன பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுப்பார்கள்.” இவ்வாறு வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...