கோவை: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில், கொரோனா நிவாரண நிதியாக, பேராசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளனர்.
கோவை: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில், கொரோனா நிவாரண நிதியாக, பேராசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளனர்.
கொரோனா முதல் அலையின் போதும், அரசு கல்லூரி பேராசிரியர்களின் சுய விருப்பத்துடன், அரசு ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ள சூழலில், இம்மாதத்திற்கான ஊதியத்தில், ஒரு நாள் பங்கை பிடித்தம் செய்து விடுவிக்க வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வீரமணி கூறுகையில், ''கோவை மண்டலத்தில், 11 கல்லூரிகளில் பணிபுரியும், சங்க உறுப்பினர்கள், 600 பேராசிரியர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். மாநிலம் முழுவதும், 5000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளனர். அரசு பிடித்தம் செய்துகொள்ள, கல்லூரி கல்வி இயக்குனருக்கு தெரிவிக்கவுள்ளோம். அவர் மூலம் கருவூலத்துறைக்கு அறிவுறுத்தப்படும்,'' என்று தெரிவித்தார்.
கொரோனா முதல் அலையின் போதும், அரசு கல்லூரி பேராசிரியர்களின் சுய விருப்பத்துடன், அரசு ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ள சூழலில், இம்மாதத்திற்கான ஊதியத்தில், ஒரு நாள் பங்கை பிடித்தம் செய்து விடுவிக்க வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வீரமணி கூறுகையில், ''கோவை மண்டலத்தில், 11 கல்லூரிகளில் பணிபுரியும், சங்க உறுப்பினர்கள், 600 பேராசிரியர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். மாநிலம் முழுவதும், 5000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளனர். அரசு பிடித்தம் செய்துகொள்ள, கல்லூரி கல்வி இயக்குனருக்கு தெரிவிக்கவுள்ளோம். அவர் மூலம் கருவூலத்துறைக்கு அறிவுறுத்தப்படும்,'' என்று தெரிவித்தார்.