கொரோனா பாதிப்பையடுத்து கடனை திருப்பி செலுத்த சாலையோர வியாபாரிகள் அவகாசம் தர கோரிக்கை!

கோவை: கொரோனா பாதிப்பு காரணமாக வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கடனை திருப்பி செலுத்த போதிய அவகாசம் வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கொரோனா பாதிப்பு காரணமாக வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கடனை திருப்பி செலுத்த போதிய அவகாசம் வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு பகல் 12 மணி வரை மட்டுமே மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் சாலையோர வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் மணி கூறுகையில்,

கோவையில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். சாலையோர வியாபாரிகள் பெரும்பாலும் காய்கறி வியாபாரம், துளசி வியாபாரம், பழங்கள் மற்றும் சிற்றுண்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள்.

கொரோனா பரவல் முழு ஊரடங்கு காரணமாக சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமும், பொருள் உதவிகளும் தந்து மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். அதே போல் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு கடன் திட்டத்தில் வங்கிகள் மூலம் கடன்கள் எளிதில் கிடைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இதற்கு முன்னர் மத்திய அரசின் சிறப்பு கடன் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் பெற்றவர்கள், தவணையை திருப்பி செலுத்த 3 மாத காலம் அவகாசம் தர வேண்டும். நரி குறவர்கள் ஊசி, பாசி விற்பனைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் அவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மலுமிச்சம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்,” என்றார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...