கோவை: கொரோனா பாதிப்பு காரணமாக வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கடனை திருப்பி செலுத்த போதிய அவகாசம் வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கொரோனா பாதிப்பு காரணமாக வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கடனை திருப்பி செலுத்த போதிய அவகாசம் வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு பகல் 12 மணி வரை மட்டுமே மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் சாலையோர வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் மணி கூறுகையில்,
கோவையில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். சாலையோர வியாபாரிகள் பெரும்பாலும் காய்கறி வியாபாரம், துளசி வியாபாரம், பழங்கள் மற்றும் சிற்றுண்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள்.
கொரோனா பரவல் முழு ஊரடங்கு காரணமாக சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமும், பொருள் உதவிகளும் தந்து மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். அதே போல் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு கடன் திட்டத்தில் வங்கிகள் மூலம் கடன்கள் எளிதில் கிடைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இதற்கு முன்னர் மத்திய அரசின் சிறப்பு கடன் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் பெற்றவர்கள், தவணையை திருப்பி செலுத்த 3 மாத காலம் அவகாசம் தர வேண்டும். நரி குறவர்கள் ஊசி, பாசி விற்பனைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் அவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மலுமிச்சம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்,” என்றார்.
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு பகல் 12 மணி வரை மட்டுமே மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் சாலையோர வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் மணி கூறுகையில்,
கோவையில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். சாலையோர வியாபாரிகள் பெரும்பாலும் காய்கறி வியாபாரம், துளசி வியாபாரம், பழங்கள் மற்றும் சிற்றுண்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள்.
கொரோனா பரவல் முழு ஊரடங்கு காரணமாக சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமும், பொருள் உதவிகளும் தந்து மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். அதே போல் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு கடன் திட்டத்தில் வங்கிகள் மூலம் கடன்கள் எளிதில் கிடைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இதற்கு முன்னர் மத்திய அரசின் சிறப்பு கடன் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் பெற்றவர்கள், தவணையை திருப்பி செலுத்த 3 மாத காலம் அவகாசம் தர வேண்டும். நரி குறவர்கள் ஊசி, பாசி விற்பனைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் அவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மலுமிச்சம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்,” என்றார்.