கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பு ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் விநியோகம்!

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவும் நோக்கில் 'ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சைபர் சிட்டி' சார்பில், 'ZF Windpower' நிறுவனத்துடன் இணைந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகள் வழங்கப்படுகின்றன.



கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவும் நோக்கில் 'ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சைபர் சிட்டி' சார்பில், 'ZF Windpower' நிறுவனத்துடன் இணைந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகள் வழங்கப்படுகின்றன.

இது குறித்து 'ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சைபர் சிட்டி' நிர்வாகிகள் கூறியதாவது,

கோவையில் உள்ள 41 ரோட்டரி கிளப் இணைந்து பல்வேறு நல உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எங்கள் கிளப், 'ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சைபர் சிட்டி' சார்பில், 'ZF Windpower' நிறுவனத்துடன் இணைந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகளை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளோம். 15 நாட்களில் அந்த கருவிகள் அனைத்தும் கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் நிறுவப்படும். இந்தக் கருவிகள், 80 படுக்கைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க உதவும்.

'ZF Windpower' தன் நிறுவனத்தின் சார்பில், கார்ப்ரேட் சமூக பங்களிப்பு (CSR) திட்டத்தின் கீழ் இந்த உதவியை செய்ய முன்வந்துள்ளார். துவக்கத்தில் 20 படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகளை வழங்க திட்டமிட்டோம்.

ஆனால், சவுந்தர்ராஜன் என்பவர் கள நிலவரத்தை ஆராய்ந்து இ எஸ் ஐ மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று எங்களிடம் தெரிவித்த காரணத்தால் ஆக்சிஜன் தேவை அதிகம் உள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, 20 படுக்கைகளுக்கு பதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து 80 படுக்கைகளுக்கு உதவும் வகையில் ஆக்சன் ஜெனரேட்டர் கருவிகளை வாங்க முடிவு செய்து ஆர்டர்கள் கொடுத்துள்ளோம். மக்கள் நலப்பணிகளில் எங்கள் பங்களிப்பு எதிர்வரும் நாட்களிலும் தொடரும். இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...