கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பு ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் விநியோகம்!

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவும் நோக்கில் 'ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சைபர் சிட்டி' சார்பில், 'ZF Windpower' நிறுவனத்துடன் இணைந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகள் வழங்கப்படுகின்றன.



கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவும் நோக்கில் 'ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சைபர் சிட்டி' சார்பில், 'ZF Windpower' நிறுவனத்துடன் இணைந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகள் வழங்கப்படுகின்றன.

இது குறித்து 'ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சைபர் சிட்டி' நிர்வாகிகள் கூறியதாவது,

கோவையில் உள்ள 41 ரோட்டரி கிளப் இணைந்து பல்வேறு நல உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எங்கள் கிளப், 'ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சைபர் சிட்டி' சார்பில், 'ZF Windpower' நிறுவனத்துடன் இணைந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகளை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளோம். 15 நாட்களில் அந்த கருவிகள் அனைத்தும் கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் நிறுவப்படும். இந்தக் கருவிகள், 80 படுக்கைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க உதவும்.

'ZF Windpower' தன் நிறுவனத்தின் சார்பில், கார்ப்ரேட் சமூக பங்களிப்பு (CSR) திட்டத்தின் கீழ் இந்த உதவியை செய்ய முன்வந்துள்ளார். துவக்கத்தில் 20 படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகளை வழங்க திட்டமிட்டோம்.

ஆனால், சவுந்தர்ராஜன் என்பவர் கள நிலவரத்தை ஆராய்ந்து இ எஸ் ஐ மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று எங்களிடம் தெரிவித்த காரணத்தால் ஆக்சிஜன் தேவை அதிகம் உள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, 20 படுக்கைகளுக்கு பதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து 80 படுக்கைகளுக்கு உதவும் வகையில் ஆக்சன் ஜெனரேட்டர் கருவிகளை வாங்க முடிவு செய்து ஆர்டர்கள் கொடுத்துள்ளோம். மக்கள் நலப்பணிகளில் எங்கள் பங்களிப்பு எதிர்வரும் நாட்களிலும் தொடரும். இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...