கோவையில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா, பெருந்தொற்று பாதிப்பு..!

கோவை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலைப் பரவல் அச்சத்தை அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.


கோவை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலைப் பரவல் அச்சத்தை அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கோவை மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் கொரோனா பெருந்தொற்றால் 2,650 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,363 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, 89,070 ஆகும். 1,722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி, 19 பேர் இறந்தனர். கோவையிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 8,361 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அதில் 4,303 பேர் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

நேற்று மட்டும், 1,909 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை 3,88,290 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நேற்று 10,003 பேரும், இதுவரை 12,36,220 பேரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். கொரோனா விதிமுறை மீறியதாக, 1,32,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 9,797 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இத்தகவலை, மாவட்ட கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...