திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை ரத்து செய்து முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை ரத்து செய்து முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின்போது திருப்பூரில் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால், ஏராளமான பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் 100 பேர் முதல் 1000 பேர் வரை ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றக்கூடிய நிலை உள்ளது. இந்நிலையில் திருப்பூரில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், “கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வை ரத்து செய்து முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும். ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
இ.எஸ்.ஐமருத்துவமனையில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்,” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக முதல்வருக்கும் கடிதமாகவும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின்போது திருப்பூரில் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால், ஏராளமான பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் 100 பேர் முதல் 1000 பேர் வரை ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றக்கூடிய நிலை உள்ளது. இந்நிலையில் திருப்பூரில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், “கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வை ரத்து செய்து முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும். ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
இ.எஸ்.ஐமருத்துவமனையில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்,” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக முதல்வருக்கும் கடிதமாகவும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.