கோவை: கோவையில் 30 லட்சம் மோசடி செய்த தனியார் ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விமான டிக்கெட்டுகள் விற்பனை மூலம் கிடைத்த ரூபாய் 29.98 லட்சத்தை மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் 30 லட்சம் மோசடி செய்த தனியார் ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விமான டிக்கெட்டுகள் விற்பனை மூலம் கிடைத்த ரூபாய் 29.98 லட்சத்தை மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.
விமான டிக்கெட்டுகளை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனத்தின் கிளை கோவை அருகே உள்ள சூலூர் காங்கேயம்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது. இக்கிளையில் இளநிலை அலுவலர் ராஜு(32) என்பவர் பணிபுரிந்து வந்தார். 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2020 ஜூலை வரையிலான காலத்தில் ராஜு வாடிக்கையாளர்களுக்கு 29.98 லட்சம் ரூபாய் மதிப்பிலான விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்தார். ஆனால், பணத்தை நிறுவனத்தின் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்தார். நிறுவனத்தின் முதன்மை மேலாளர் சங்கர் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் இதுகுறித்து புகார் செய்தார். விசாரணையில் ராஜு மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விமான டிக்கெட்டுகளை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனத்தின் கிளை கோவை அருகே உள்ள சூலூர் காங்கேயம்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது. இக்கிளையில் இளநிலை அலுவலர் ராஜு(32) என்பவர் பணிபுரிந்து வந்தார். 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2020 ஜூலை வரையிலான காலத்தில் ராஜு வாடிக்கையாளர்களுக்கு 29.98 லட்சம் ரூபாய் மதிப்பிலான விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்தார். ஆனால், பணத்தை நிறுவனத்தின் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்தார். நிறுவனத்தின் முதன்மை மேலாளர் சங்கர் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் இதுகுறித்து புகார் செய்தார். விசாரணையில் ராஜு மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.