கிணத்துக்கடவு சந்தைக்கு வியாபாரிகள் வராததால் விவசாயிகள் கவலை!

கோவை: கிணத்துக்கடவு சந்தைக்கு வியாபாரிகள் வராததால் காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு சந்தைக்கு வியாபாரிகள் வராததால் காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் அறுவடை செய்யும் தக்காளி, பச்சை மிளகாய், தட்டை பயறு, கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும். விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கம்.



கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நண்பகல் 12 மணி வரையும் மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறக்கபடுவதால் வியாபாரம் குறைந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கிணத்துக்கடவு சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை வாங்க வியாபாரிகள் வரவில்லை.



இதனால், விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. நண்பகல் 12 மணிக்கு மேல் சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகளை திருப்பி எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காய்கறிகள் எளிதில் அழுகும் என்பதால் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை என்ன செய்து என்று தெரியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...