கோவை: கோவையில் 13 வயது சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 21 வயது இௐளைஞர் மீது போக்சோ சட்டத்தின் மூலம் கோவை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
கோவை: கோவையில் 13 வயது சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 21 வயது இௐளைஞர் மீது போக்சோ சட்டத்தின் மூலம் கோவை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
கோவை மாவட்டம் ஆனைமலையைச் சேர்ந்த ரகமத்துல்லா என்பவருடைய மகன் முகமது சபீர் வயது 21. இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். இந்தப் புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, முகம்மது சமீர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து அவரை, கடந்து 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமியின் படத்தை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட முகமது சமீருக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையும் ஆறாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, முகமது சபீரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் ஆனைமலையைச் சேர்ந்த ரகமத்துல்லா என்பவருடைய மகன் முகமது சபீர் வயது 21. இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். இந்தப் புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, முகம்மது சமீர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து அவரை, கடந்து 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமியின் படத்தை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட முகமது சமீருக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையும் ஆறாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, முகமது சபீரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.