நீலகிரியில் அதிரடிப்படையினர் வாகனம் விபத்து... காயங்களுடன் தப்பிய காவலர்கள்..!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கேரளா எல்லைப் பகுதியான கிண்ணக்கொரை பகுதியில் மாவோயிஸ்ட் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவரும் அதிரடிப்படையினரின் வாகனம் தாய்சோலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி தலைகுப்புற விழுந்ததில் ஏழு காவலர்கள் காயங்களுடன் தப்பினர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கேரளா எல்லைப் பகுதியான கிண்ணக்கொரை பகுதியில் மாவோயிஸ்ட் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவரும் அதிரடிப்படையினரின் வாகனம் தாய்சோலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி தலைகுப்புற விழுந்ததில் ஏழு காவலர்கள் காயங்களுடன் தப்பினர்.

நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கிண்ணக்கொரை பகுதியில் பணிபுரிந்து வரும் 10 அதிரடிப் படை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக உதகை அரசு மருத்துவமனைக்கு வேன் மூலம் வந்தனர். வேனினை ஜெயக்குமார் என்ற காவலர் ஓட்டினார்.



வேன் தாய்சோலைப் பகுதியில் திரும்பிய போது நிலைத்தடுமாறி, சாலையின் குறுக்கே விழுந்தது.



இதில் அருளப்பன, சரவணன, மகேந்திரன, நித்தியானந்தன், அன்பரசன், கதிரவன், ரத்தினவேல் ஆகிய 7 பேருக்கு தலை, கை கால்களில் காயம் ஏற்பட்டது. சந்தோஷ், மன்சூர், ஓட்டுநர் ஜெயக்குமார் ஆகியோர் காயமின்றி தப்பினர். இவர்களுக்கு தாய்சோலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்கள். ஏழு காவலர்கள் மேல் சிகிச்சைக்காக உதகை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...