கிணத்துக்கடவு அருகே கட்டுப்பாடுகளை மீறி அதிக ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம்!

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அதிக ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அதிக ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பேருந்து மற்றும் இதர வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் உரிய முறையில் கடைபிடிக்க படுகிறதா என கிணத்துக்கடவு பகுதியில் உள்ள வீரப்ப கவுண்டனூர், சொக்கனூர், சிங்கையன்புதூர் ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறையினர் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் ராம்ராஜ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது வீரப்பகவுண்டனூரில் ஒரு ஜீப்பில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி 15க்கும் மேற்பட்ட ஆட்களை ஏற்றி வந்தனர். வாகனத்தை நிறுத்தி வருவாய்த் துறையினர் அபராதம் விதித்தனர்.



அதேபோல் சிங்கையன்புதூர் பகுதியில் ஆட்டோ மற்றும் கார்களில் அதிக ஆட்களை ஏற்றி வந்த வாகனங்களுக்கும் வருவாய்த் துறையினர் அபராதம் விதித்தனர். இனி இது போல ஆட்களை அதிக அளவு ஏற்றிச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...