நீலகிரி: கர்நாடகாவில் இருந்து தப்பிய 3000 கொரோனா நோயாளிகள் உதகையில் நுழைவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.
நீலகிரி: கர்நாடகாவில் இருந்து தப்பிய 3000 கொரோனா நோயாளிகள் உதகையில் நுழைவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3000 நோயாளிகள் அங்கிருந்து தப்பி விட்டதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, “கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இ-பாஸ் இல்லாமல் யாரும் தமிழகத்துக்குள் உள்ளே நுழைய வாய்ப்பில்லை. இ-பாஸ் இல்லாமல் நுழைபவர்களை தடுக்க சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் இந்த வாரத்தில் மட்டும் 5 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைஎடுக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3000 நோயாளிகள் அங்கிருந்து தப்பி விட்டதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, “கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இ-பாஸ் இல்லாமல் யாரும் தமிழகத்துக்குள் உள்ளே நுழைய வாய்ப்பில்லை. இ-பாஸ் இல்லாமல் நுழைபவர்களை தடுக்க சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் இந்த வாரத்தில் மட்டும் 5 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைஎடுக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.