கோத்தகிரி அருகே பெத்தளா கோயில் பிரச்சனையில் 3 வருடங்களுக்குப் பின் தீர்வு!

நீலகிரி: கோத்தகிரி அருகே பெத்தளா கோயில் பிரச்சனையில் 3 வருடங்களுக்குப் பின் தீர்வு காணப்பட்டுள்ளது.


நீலகிரி: கோத்தகிரி அருகே பெத்தளா கோயில் பிரச்சனையில் 3 வருடங்களுக்குப் பின் தீர்வு காணப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெத்தளா ஹெத்தை அம்மன் கோயில் கடந்த 3 வருடங்களாக பூசாரி தேர்ந்தெடுப்பதில் இருந்து வந்த பிரச்சினை, குன்னூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் சுரேஷ் முன்னிலையில் புதன்கிழமை தீர்வு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற பெத்தளா ஹெத்தையம்மன் கோயில் பூசாரிகளில் 3 பேர் ஊர்மக்களை மதிக்காமல் கோயில் விதிமுறைகளுக்கு மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.



பூசாரிகளை மாற்ற வலியுறுத்தி இளிதுரை எடப்பள்ளி, பெட்டடி உள்ளிட்ட 18 கிராமத்தை சேர்ந்த 2500 படுகர் இன மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், முற்றுகையிட்டும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பூசாரிகளுக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரு கோஷ்டிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில் குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், இரு பிரிவினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



இதையடுத்து இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே சமாதானம் ஏற்பட்டது. அதன்படி இனி வரும் காலங்களில் ஊர் பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதனால் ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...