கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கிணத்துக்கடவு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கிணத்துக்கடவு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.
இதனால், ஒரே இடத்தில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த சுகாதாரத்துறை வலியுறுத்தி இருந்தது. கிணத்துக்கடவு பகுதியில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று கிணத்துக்கடவு நகரப்பகுதியில் உள்ள பேரூராட்சி சமுதாயக் கூடத்திலும், இதைப்போல் காரச்சேரி பகுதியிலுள்ள மினி கிளினிக்கிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கிணத்துக்கடவு நகரப் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏதாவது இருக்கிறதா, காய்ச்சல், சளி போன்றவைகள் இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், காரச்சேரியில் நடைபெற்ற மருத்துவ முகாமில், அங்குள்ள பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கான மாத்திரைகள் வழங்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.
இதனால், ஒரே இடத்தில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த சுகாதாரத்துறை வலியுறுத்தி இருந்தது. கிணத்துக்கடவு பகுதியில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன் அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று கிணத்துக்கடவு நகரப்பகுதியில் உள்ள பேரூராட்சி சமுதாயக் கூடத்திலும், இதைப்போல் காரச்சேரி பகுதியிலுள்ள மினி கிளினிக்கிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கிணத்துக்கடவு நகரப் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏதாவது இருக்கிறதா, காய்ச்சல், சளி போன்றவைகள் இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், காரச்சேரியில் நடைபெற்ற மருத்துவ முகாமில், அங்குள்ள பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கான மாத்திரைகள் வழங்கப்பட்டன.