கோவை: வால்பாறையில் முகக்கவசம் தலை கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை: வால்பாறையில் முகக்கவசம் தலை கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் ஏராளமான வாகனங்கள் இயங்குகின்றன. இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் லாரிகளில் பயணம் செய்வோர் முறையாக முகக்கவசம் அணிவதில்லை.

மேலும், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டின் படி ஆட்டோக்களில் இருவர் மட்டும் பயணம் செய்ய வேண்டும், கார்களில் 3 பயணிகள் மட்டும் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து கார்கள், வேன்கள், ஆட்டோக்கள் மற்றும் லாரிகளை காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது, முக கவசம் அணியாதவர்களுக்கும், அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் சென்ற வாகன ஓட்டிகளுக்கும் காவல்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். சாலையில் செல்பவர்களையும் முறையாக முகக்கவசம் அணியும் படியும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் ஏராளமான வாகனங்கள் இயங்குகின்றன. இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் லாரிகளில் பயணம் செய்வோர் முறையாக முகக்கவசம் அணிவதில்லை.
மேலும், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டின் படி ஆட்டோக்களில் இருவர் மட்டும் பயணம் செய்ய வேண்டும், கார்களில் 3 பயணிகள் மட்டும் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து கார்கள், வேன்கள், ஆட்டோக்கள் மற்றும் லாரிகளை காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது, முக கவசம் அணியாதவர்களுக்கும், அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் சென்ற வாகன ஓட்டிகளுக்கும் காவல்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். சாலையில் செல்பவர்களையும் முறையாக முகக்கவசம் அணியும் படியும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.