கோவையில் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடங்கியது..!

கோவை மாவட்டத்தில், மே இரண்டாம் தேதி ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடவிருக்கின்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று தொடங்கியது.


கோவை: கோவை மாவட்டத்தில், மே இரண்டாம் தேதி ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடவிருக்கின்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று தொடங்கியது.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சுற்றுக்கு, 20 மின்னணு இயந்திரங்கள் வீதம் ஓட்டு எண்ணிக்கை நடத்தவும், மற்ற தொகுதிகளில் சுற்றுக்கு 14 மின்னணு இயந்திரம் வீதம் ஓட்டு எண்ணிக்கை நடத்தவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பணியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 600 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி, நேற்று அந்தந்த தொகுதிக்குரிய மையங்களில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் நடந்தது.

ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவரும், மே இரண்டாம் தேதி காலை 6:00 மணிக்குள், எண்ணிக்கை மையத்துக்கு வந்து விட வேண்டும் என்று அலுவலர்கள் அறிவுறுத்தினர். எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் அனைவருக்கும், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று, ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 29ஆம் தேதி, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று, பயிற்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஓட்டு எண்ணிக்கைக்கு முன்னதாக, மீண்டும் ஒரு பயிற்சி முகாம் நடத்தப்படும் என்றும், அலுவலர்கள் தெரிவித்தனர். சித்தாபுதூர் அரசு பள்ளியில் நடந்த பயிற்சி முகாமில், வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசனும், கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமில், தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரும் தலைமை வகித்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...