வால்பாறை: வால்பாறை நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிய ஜான்சன் என்பவர் வேலூரில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வால்பாறை: வால்பாறை நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிய ஜான்சன் என்பவர் வேலூரில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஆணையராக பணியாற்றிய பவுன்ராஜ் என்பவர் ரூ.15.62 கோடி நகராட்சி நிதியில் முறைகேடு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து கோவை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்,
பொள்ளாச்சி நகராட்சி ஆணையராக இருக்கும் காந்தி குமார் வால்பாறை ஆணையராக கூடுதல் பொறுப்பேற்று உள்ளார், மேலும் வால்பாறையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜான்சன் சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி நகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
வால்பாறையில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சரவணகுமார் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் கணக்கு பரிசோதனை ஆய்வு செய்து வரும் நிலையில் கொரோனா காலத்தில் சுகாதார ஆய்வாளர் வேலை முக்கியமானதாகும். இந்த நிலையில் ஜான்சனை பணி மாற்றம் செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார். அவரது மொபைல் எண்களை தொடர்பு கொள்ள முடியாதபடி அணைத்து வைக்கப்பட்டிருந்தன. அவரை உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் ஜான்சன் வேலூரில் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வேலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஆணையராக பணியாற்றிய பவுன்ராஜ் என்பவர் ரூ.15.62 கோடி நகராட்சி நிதியில் முறைகேடு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து கோவை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்,
பொள்ளாச்சி நகராட்சி ஆணையராக இருக்கும் காந்தி குமார் வால்பாறை ஆணையராக கூடுதல் பொறுப்பேற்று உள்ளார், மேலும் வால்பாறையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜான்சன் சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி நகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
வால்பாறையில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சரவணகுமார் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் கணக்கு பரிசோதனை ஆய்வு செய்து வரும் நிலையில் கொரோனா காலத்தில் சுகாதார ஆய்வாளர் வேலை முக்கியமானதாகும். இந்த நிலையில் ஜான்சனை பணி மாற்றம் செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார். அவரது மொபைல் எண்களை தொடர்பு கொள்ள முடியாதபடி அணைத்து வைக்கப்பட்டிருந்தன. அவரை உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் ஜான்சன் வேலூரில் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வேலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.