வால்பாறையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றியவர் வேலூரில் தற்கொலை!

வால்பாறை: வால்பாறை நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிய ஜான்சன் என்பவர் வேலூரில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


வால்பாறை: வால்பாறை நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிய ஜான்சன் என்பவர் வேலூரில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஆணையராக பணியாற்றிய பவுன்ராஜ் என்பவர் ரூ.15.62 கோடி நகராட்சி நிதியில் முறைகேடு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து கோவை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்,

பொள்ளாச்சி நகராட்சி ஆணையராக இருக்கும் காந்தி குமார் வால்பாறை ஆணையராக கூடுதல் பொறுப்பேற்று உள்ளார், மேலும் வால்பாறையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜான்சன் சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி நகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

வால்பாறையில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சரவணகுமார் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் கணக்கு பரிசோதனை ஆய்வு செய்து வரும் நிலையில் கொரோனா காலத்தில் சுகாதார ஆய்வாளர் வேலை முக்கியமானதாகும். இந்த நிலையில் ஜான்சனை பணி மாற்றம் செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார். அவரது மொபைல் எண்களை தொடர்பு கொள்ள முடியாதபடி அணைத்து வைக்கப்பட்டிருந்தன. அவரை உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் ஜான்சன் வேலூரில் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வேலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...