கொரோனா தடுப்பூசி விலையை உயர்த்தக் கூடாது என இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை

கோவை: கொரோனா தடுப்பூசி விலையை உயர்த்தக் கூடாது என தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளை கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: கொரோனா தடுப்பூசி விலையை உயர்த்தக் கூடாது என தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“கொரோனா இரண்டாம் அலை அதிகரிப்பால் மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன், தடுப்பூசி, பரிசோதனை உபகரணங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது. மக்களுக்கு சேவையாற்றிட ஐ.எம்.ஏ., தயாராக உள்ளது. கொரோனா நோயாளிகள், கொரோனா பாதிக்காத நோயாளிகளுடன் சேர்க்கப்பட கூடாது. குறைந்தளவு வசதிகள் உள்ள மருத்துவமனைகளை, கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றி, முறையாக கண்காணிக்க வேண்டும்.

ரெம்டெசிவிர் உள்ளிட்ட, அனைத்து இன்றியமையாத மருந்துகளும் தமிழ்நாடு மருத்துவக் கழகம் மூலம் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும், விநியோகிக்கப்பட வேண்டும். உள்ளூர் ஊராட்சி அமைப்புகள், மருத்துவ நிறுவனங்களுக்கு கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என, அபராதம் விதிக்கின்றன.இதை தடுக்க வேண்டும். தடுப்பூசியின் விலையை மாநில அரசு தற்போது உள்ள, ரூ.250 விலையில் இருந்து அதிகரிக்க கூடாது. அதிகளவு திரவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் கட்டமைப்பை ஏற்படுத்த, உடனடியாக மானிய அறிவிப்பு வெளியிட வேண்டும்.

அரசு கொரோனா பரிசோதனைக்கான, ஆர்.டி.பி.சி.ஆர்., உள்ளிட்ட பரிசோதனை உபகரணங்கள் தடையின்றி கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் மருத்துவம் பயின்று எப்.எம்.ஜி., தேர்வு எழுதியவர்களை, கொரோனா பணிகளில் பயன்படுத்தலாம்.” இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...