கோவையில் கணவன் குடிபோதையில் அடித்துத் துன்புறுத்துவதாக பெண் கால்நடை மருத்துவர் புகார்!

கோவை: கோவையில் கணவன் குடிபோதையில் அடித்து துன்புறுத்துவதுடன், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் பெண் கால்நடை மருத்துவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.


கோவை: கோவையில் கணவன் குடிபோதையில் அடித்து துன்புறுத்துவதுடன், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் பெண் கால்நடை மருத்துவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பெண் கால்நடை மருத்துவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

“திருமணத்தின் போது எனது பெற்றோர்கள் வரதட்சணையாக 100 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 20 லட்சம் கொடுத்தனர். அவருடன் திருமணமான நான்காவது நாளில் எனது கணவருக்கு போதைப்பழக்கம் இருப்பதும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக எனக்குத் தெரிய வந்தது. இதுகுறித்து நான் கேட்டபோது எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். நகைகளை அடகு வைத்து செலவு செய்துவிட்டு திருப்பித் தர மறுக்கின்றனர்.

மேலும் எனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொல்லை கொடுத்து வருகின்றனர். எனவே எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருந்தார். இதனடிப்படையில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் கால்நடை மருத்துவரின் கணவர் அவரது குடும்பத்தினர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...