கோவை கிணத்துக்கடவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 3 மருத்துவக் குழு அமைப்பு!

கோவை: கோவை கிணத்துக்கடவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 3 மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 3 மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்று வரை 415 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த ஓராண்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்

இந்நிலையில், கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 415 பேரில் இன்று வரை 383 பேர் குணமடைந்து உள்ளனர். மீதமுள்ள 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிணத்துக்கடவு பகுதியில் 3 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா தலைமையில் சமித்தா, அருண் பிரகாஷ்,திலீப்குமார், முகில்வண்ணன் ஆகிய மருத்துவர்கள் அடங்கிய 3 மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மேலும் கொரோனா பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மருத்துவ பரிசோதனை செய்வது போன்ற பணிகளில் இந்த மருத்துவ குழுவினர் செய்து வருவதாக சுகாதாரத் துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...