கோவை: கொரோனா பெருந்தொற்று பரவலின் இரண்டாம் அலையின் வேகம் அதிகமாக உள்ளதால், தமிழகம் முழுவதும் தட்டச்சு பயிற்சி நிலையங்களை மறு உத்தரவு வரும்வரை மூட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
கோவை: கொரோனா பெருந்தொற்று பரவலின் இரண்டாம் அலையின் வேகம் அதிகமாக உள்ளதால், தமிழகம் முழுவதும் தட்டச்சு பயிற்சி நிலையங்களை மறு உத்தரவு வரும்வரை மூட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏராளமான தட்டச்சு பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது ஏழு மாத காலங்கள் இதுபோன்ற பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டன. அதன்பிறகு, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இதுபோன்ற பயிற்சி நிலையங்கள் திறக்கப்பட்டன. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழ்நிலையில், மீண்டும் தட்டச்சு பயிற்சி நிலையங்களை மறு உத்தரவு வரும் வரை மூடக்கோரி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
எனவே நாளை முதல் தட்டச்சு பயிற்சி நிலையங்கள் செயல்படாது. இதனால் அதை நம்பியுள்ள பல குடும்பங்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் என தட்டச்சுப் பயிற்சி நிலைய உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏராளமான தட்டச்சு பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது ஏழு மாத காலங்கள் இதுபோன்ற பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டன. அதன்பிறகு, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இதுபோன்ற பயிற்சி நிலையங்கள் திறக்கப்பட்டன. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழ்நிலையில், மீண்டும் தட்டச்சு பயிற்சி நிலையங்களை மறு உத்தரவு வரும் வரை மூடக்கோரி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
எனவே நாளை முதல் தட்டச்சு பயிற்சி நிலையங்கள் செயல்படாது. இதனால் அதை நம்பியுள்ள பல குடும்பங்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் என தட்டச்சுப் பயிற்சி நிலைய உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.