கோவை: கோவை ரேஸ்கோர்ஸிலுள்ள வருமானவரித்துறை அலுவலகத்திலுள்ள பணியாளர்கள் சிலர், கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், அந்தத் தளம் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மண்டல அலுவலகம் பூட்டப்பட்டது.
கோவை: கோவை ரேஸ்கோர்ஸிலுள்ள வருமானவரித்துறை அலுவலகத்திலுள்ள பணியாளர்கள் சிலர், கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், அந்தத் தளம் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மண்டல அலுவலகம் பூட்டப்பட்டது.
கோவை ரேஸ்கோர்ஸில் வருமானவரித்துறை மண்டல அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தின் எட்டாவது தளத்தில், இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தத் தளம் முழுக்க உள்ள அலுவலகம் முழுவதும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அங்கு பணியிலிருந்த பிற பணியாளர்கள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் யாருக்கும் தொற்று இல்லை.
வருமானவரித்துறை அலுவலகத்தில் நுழையும் ஒவ்வொருவரும், கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி, உடல் வெப்ப நிலை பரிசோதித்த பின்பே, அனுமதிக்கப்படுகின்றனர். முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிப்பதில்லை. சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான சூழலில், எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து, அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கோவை ரேஸ்கோர்ஸில் வருமானவரித்துறை மண்டல அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தின் எட்டாவது தளத்தில், இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தத் தளம் முழுக்க உள்ள அலுவலகம் முழுவதும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அங்கு பணியிலிருந்த பிற பணியாளர்கள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் யாருக்கும் தொற்று இல்லை.
வருமானவரித்துறை அலுவலகத்தில் நுழையும் ஒவ்வொருவரும், கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி, உடல் வெப்ப நிலை பரிசோதித்த பின்பே, அனுமதிக்கப்படுகின்றனர். முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிப்பதில்லை. சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான சூழலில், எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து, அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.