கோவை: கோவை மாநகராட்சி பகுதி நோடல் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கையாக விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூல் செய்வது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சி பகுதி நோடல் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கையாக விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூல் செய்வது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலையில் இந்தியாவின் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் தினமும் 700 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதில் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 500 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவுப்படி மாநகராட்சியில் மண்டல வாரியாக நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, கோவையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் பிரசன்னா ராமசாமி, மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் (கோயில் நிலங்கள் பிரிவு) மேனகா, வடக்கு மண்டலத்துக்கும் மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி, கிழக்கு மண்டலத்துக்கும் கோவையில் உள்ள தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் சாதனைக்குறள், மேற்கு மண்டலத்துக்கும் கலால் பிரிவு துணை ஆணையர் கலைவாணி, மத்திய மண்டலத்துக்கும் நோடல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தற்போது கோவை மாநகராட்சி பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், மண்டல வாரியாக மாநகராட்சி அதிகாரிகளிடம், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில், சளி மாதிரிகளை அதிகளவில் சேகரிக்க வேண்டும். அங்கு காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தி, நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மண்டல அளவில் பரிசோதனை மையங்களை உருவாக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதங்களை வசூல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
நோடல் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் கோவை மாநகராட்சி பகுதிகள் உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவின் இரண்டாவது அலையில் இந்தியாவின் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் தினமும் 700 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதில் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 500 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவுப்படி மாநகராட்சியில் மண்டல வாரியாக நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, கோவையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் பிரசன்னா ராமசாமி, மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் (கோயில் நிலங்கள் பிரிவு) மேனகா, வடக்கு மண்டலத்துக்கும் மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி, கிழக்கு மண்டலத்துக்கும் கோவையில் உள்ள தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் சாதனைக்குறள், மேற்கு மண்டலத்துக்கும் கலால் பிரிவு துணை ஆணையர் கலைவாணி, மத்திய மண்டலத்துக்கும் நோடல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தற்போது கோவை மாநகராட்சி பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், மண்டல வாரியாக மாநகராட்சி அதிகாரிகளிடம், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில், சளி மாதிரிகளை அதிகளவில் சேகரிக்க வேண்டும். அங்கு காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தி, நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மண்டல அளவில் பரிசோதனை மையங்களை உருவாக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதங்களை வசூல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
நோடல் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் கோவை மாநகராட்சி பகுதிகள் உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.