கோவை: கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் கிணத்துக்கடவு வட்டாரத்தில் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கோவை: கொரானா தடுப்பூசி இருப்பு இல்லாததால் கிணத்துக்கடவு வட்டாரத்தில் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரானா தொற்றின் 2-வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. எனவே, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிப்பதுடன், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அரசு வலியுறுத்தி உள்ளது. கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சனிக்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் திங்கட்கிழமை வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை கிணத்துக்கடவு வட்டார பகுதிக்கு குறைந்தளவே தடுப்பூசிகள் வந்த நிலையில் இன்று காலை முதல் கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இன்று மட்டும் 210 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும் தொடர்ந்து தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி வந்தால் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் மிக தீவிரமாக நடைபெறும் என்று சுகாதாரத் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரானா தொற்றின் 2-வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. எனவே, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிப்பதுடன், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அரசு வலியுறுத்தி உள்ளது. கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சனிக்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் திங்கட்கிழமை வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை கிணத்துக்கடவு வட்டார பகுதிக்கு குறைந்தளவே தடுப்பூசிகள் வந்த நிலையில் இன்று காலை முதல் கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இன்று மட்டும் 210 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும் தொடர்ந்து தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி வந்தால் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் மிக தீவிரமாக நடைபெறும் என்று சுகாதாரத் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.