ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நவீன கருவிகளுடன் வனத் துறையினருக்கு பயிற்சி!

திருப்பூர்: ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நவீன கருவிகளுடன் வனத் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


திருப்பூர்: ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நவீன கருவிகளுடன் வனத் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனகோட்டத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளது.

இப்பகுதிகளில் காட்டு தீ ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நவீன கருவிகளை வனத்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். வெறும் கைகளால் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாது. மேலும் வனப்பகுதிக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாது.



எனவே, மனிதர்கள் எளிதாக சுமந்து செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்பட்ட காற்றை வெளியேற்றி தீயை கட்டுப்படுத்தும் கருவியும் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் கருவியும் புதிதாக காட்டுத்தீ கட்டுப்படுத்தும் குழுவில் இணைக்கப்பட்டுள்ளது.



இந்த கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

மேலும், இந்த தீ தடுப்பு பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு சிறப்பு உடைகளும் காலணிகளும் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குனர் கணேஷ் ராம் மற்றும் உடுமலை வனச்சரகர் தனபாலன் அமராவதி வனச்சரகர் சுரேஷ் கொழுமம் வனச்சரகர் மற்றும் வந்தரவு வனச்சரகர் முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...