திருப்பூர்: தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கான நோய் தொற்று ஏற்படாத வகையிலான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்: தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையிலான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
பின்னலாடை நிறுவனங்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று 2வது அலை பரவி வருகிறது.
இந்த நிலையில், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொழிற்சாலைகளில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கான முகக்கவசம், கையுறை, கை கழுவுவதற்கான சோப்பு உள்ளிட்டவைகள் அந்தந்த நிறுவனங்கள் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் எனவும், சிறப்பு முகாம்கள் அமைத்து தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும், நோயினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இஎஸ்ஐ திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு வேலைக்கு செல்ல முடியாத நாட்களுக்கான பகுதி சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னலாடை நிறுவனங்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று 2வது அலை பரவி வருகிறது.
இந்த நிலையில், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொழிற்சாலைகளில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கான முகக்கவசம், கையுறை, கை கழுவுவதற்கான சோப்பு உள்ளிட்டவைகள் அந்தந்த நிறுவனங்கள் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் எனவும், சிறப்பு முகாம்கள் அமைத்து தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும், நோயினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இஎஸ்ஐ திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு வேலைக்கு செல்ல முடியாத நாட்களுக்கான பகுதி சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.