வாழ்வாதாரம் காக்காவிட்டால் வாக்காளர் அடையாள அட்டை அரசிடம் ஒப்படைக்கப்படும் - தமிழ்நாடு ஹையர் கூட்ஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

கோவை: திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் 50% பேர் பங்கேற்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தங்களுடைய வாக்காளர் அட்டையை மொத்தமாக அரசிடம் ஒப்படைக்கப்படும் என தமிழ்நாடு ஹையர் கூட்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் 50% பேர் பங்கேற்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தங்களுடைய வாக்காளர் அட்டையை மொத்தமாக அரசிடம் ஒப்படைக்கப்படும் என தமிழ்நாடு ஹையர் கூட்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சங்கத்தின் தலைவர் ஜெயசீலன் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் கூறியதாவது:



கொரோனா நோய்த்தொற்று பரவல் முதல் அலை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து எங்கள் சங்கத்தினர் மீண்டு வரவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது இரண்டாவது அலை பரவல் காரணமாக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள அனைத்து தொழில்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

எனவே, தமிழக அரசு திருமணம் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் 50 சதவீத பங்கேற்பாளர்களுக்கு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். அப்போது மட்டுமே இதை நம்பி உள்ள மேடை அலங்காரம், சாமியானா பந்தல் அமைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் பர்னிச்சர் வாடகைக்கு விடுபவர்கள் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

எங்கள் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு தவறும்பட்சத்தில் அனைவரின் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் ஒப்படைத்து விடுவோம். தவிர எங்கள் தொழிலில் நாங்கள் பயன்படுத்தி வரும் உபகரணங்கள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றுவிடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...