கோவை : கொரோனா அறிகுறிகள் தென்பட்ட உடனேயே சிகிச்சை பெற முன்வரவேண்டும் என்று கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா அறிவுறுத்தி உள்ளார்.
கோவை : கொரோனா அறிகுறிகள் தென்பட்ட உடனேயே சிகிச்சை பெற முன்வரவேண்டும் என்று கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த இரு வாரங்களில் பாதிப்பு இரட்டிப்பாகி உள்ளது.
கடந்த சில தினங்களாக, உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை, 707 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலாகூறியதாவது: “கொரோனா பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் சிலர், நோய்த் தொற்றின் தீவிரத்தால் உயிரிழக்கின்றனர்.
கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்ட உடன் அலட்சியமாக இருந்து விட்டு, நோய் முற்றியபிறகு தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் அனுமதிக்கப்பட்ட, 24 மணி நேரத்தில் உயிரிழப்பு நேருவது அதிகரிக்கிறது
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 50 சதவீத உயிரிழப்புகளுக்கு, நோயாளிகள் தாமதமாக சிகிச்சை வருவதுதான் காரணம். காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி செயல்பட்டால் உயிரிழப்பை தவிர்க்கலாம். உடனடி சிகிச்சையால், உயிரிழப்பை முற்றிலும் கட்டுப்படுத்தலாம்.”
இவ்வாறு அவர் கூறினார்
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த இரு வாரங்களில் பாதிப்பு இரட்டிப்பாகி உள்ளது.
கடந்த சில தினங்களாக, உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை, 707 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலாகூறியதாவது: “கொரோனா பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் சிலர், நோய்த் தொற்றின் தீவிரத்தால் உயிரிழக்கின்றனர்.
கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்ட உடன் அலட்சியமாக இருந்து விட்டு, நோய் முற்றியபிறகு தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் அனுமதிக்கப்பட்ட, 24 மணி நேரத்தில் உயிரிழப்பு நேருவது அதிகரிக்கிறது
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 50 சதவீத உயிரிழப்புகளுக்கு, நோயாளிகள் தாமதமாக சிகிச்சை வருவதுதான் காரணம். காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி செயல்பட்டால் உயிரிழப்பை தவிர்க்கலாம். உடனடி சிகிச்சையால், உயிரிழப்பை முற்றிலும் கட்டுப்படுத்தலாம்.”
இவ்வாறு அவர் கூறினார்