மூலப்பொருட்களை பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

கோவை: மூலப்பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என மத்திய அரசுக்கு தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: மூலப்பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என மத்திய அரசுக்கு தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்க(சீமா) தலைவர் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில்," இந்திய பம்ப்செட் நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 15 ஆயிரம் கோடி உள்ள நிலையில், கோவை பம்ப்செட் நிறுவனங்களின் பங்களிப்பு, 6,500 கோடியாக உள்ளது. கோவையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது பம்ப்செட் நிறுவனங்கள் மூலப்பொருள் விலை ஏற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை நிர்ணயம் செய்வது கடினமாக உள்ளது.

எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் மூலப்பொருட்கள் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நடப்பு மூலதனம் பற்றாக்குறை ஏற்பட்டு, திட்டமிட்ட உற்பத்தி இலக்கை அடைய முடியாமல் நஷ்டத்தில் இயங்குகின்றன. பெரிய நிறுவனங்களுக்கு பொருட்களை உற்பத்தி செய்துதரும் நிறுவனங்களின் நிலையும் மோசமாக உள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும், 90 சதவீத பம்ப்செட்கள் கோவையில் உள்ள எம்.எஸ்.எம்.இ.,களால் உற்பத்திசெய்யப்படுகின்றன. அதிகம் விற்பனையாகும் பம்ப்செட் களின் உற்பத்தி செலவு, 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

உற்பத்தியாளர்கள் அதிகபட்சம், 12 சதவீதம் மட்டுமே கடந்த மூன்று மாதங்களில் உயர்த்தியுள்ளனர். மூலப்பொருட்களின் விலை, 30 சதவீதம் உயர்ந்துள்ளதால் உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்த முடியாமல் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பெரும் நஷ்டம் அடைகின்றன.

மத்திய அரசு ஸ்டீல் மற்றும் இரும்புத் தாது போன்ற பொருட்களின் இறக்குமதியை அனுமதித்து ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். மூலப்பொருட்களை பதுக்குவோர், செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தும் ஸ்டீல் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.எஸ்.எம்.இ.,க்களுக்கு 20 சதவீத நடப்பு மூலதன கடன் அளிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்,” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...