முள்ளுப்பாடி மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை!

கோவை: முள்ளுப்பாடி மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கும் படி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


கோவை: முள்ளுப்பாடி மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கும்படி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவை மாவட்டம் ஈச்சனாரியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி வரை உள்ள 27 கிலோமீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கம் செய்து நான்கு வழி கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது

மேலும் விழாக்காலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் நீளமான மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.



மேலும் முள்ளுப்பாடி ரயில்வே கிராசிங்கில் ரயில்வே துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் இரும்பு மேம்பாலம் போடப்பட்டுள்ளது.



கோடிக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட முள்ளுப்பாடி ரயில்வே மேம்பாலம் பகல் நேரத்தில் பளிச்சென்று தெரிந்தாலும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.



அழகிய தோற்றத்துடன் அமைக்கப்பட்ட இரும்பு மேம்பாலத்தில் மின் விளக்குகள் இன்னும் பொருத்தப்படவில்லை. மின் விளக்குகள் பொருத்தி இரவு நேரத்தில் ஜொலிக்கும் மேம்பாலம் ஆக மாற்ற வேண்டும் என அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...